ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Sunday, January 12, 2014

மேலைநாட்டு ஜோதிடம் - நாஸ்ட்ரடாமஸ்

 Western Astrology என்பது என்ன? நமது ஜோதிடத்தைக் காட்டிலும் அவர்கள் ஜோதிடம் உயர்ந்ததா? 

சிலர் நினைப்பதுபோல் மேலை நாட்டவர் ஜோதிடம் நமது ஜோதிடத்திலிருந்து சென்றது அல்ல:  அதற்கு அடிப்படை நமது ஜோதிடமும்  அல்ல;  அது அவர்களின் தனித்தன்மையுடையது.  இயேசு பிறப்பதற்கு முன்பிருந்தே அவர்களுக்கு ஜோதிடத்தைப் பற்றிய கருத்துக்கள் இருந்து வந்தன.  

சேத் என்பவர்தான் உலகத்தின் முதல் ஜோதிடர் என்று அவர்கள் கருதுகின்றனர். அவர்தான் ஆகாய மண்டலத்தில் சூரியனுடைய பாதையையும், அந்தப் பாதையில் பூர்ணச்சந்திரன்  ஓர் ஆண்டில் 12 முறை குறுக்கிடுவதையும் கண்டார். இதைவைத்துத்தான் அவர் ஆகாய மண்டலத்தை 12 வீடுகளாகப் பிரித்தார்.  நாம் அந்த 12 வீடுகளைத்தான் ராசி என்று குறிப்பிடுகிறோம்.

இதைப்போல் கிரேக்கர்கள்,  பாபிலோனியர்கள்,  சீனர்கள் ஆகியோரும் ஜோதிடத்தைப் பற்றி அறிந்து வைத்து இருந்தனர்.  சீன ஜோதிடம் என்பது ஒரு தனி முறையாகவே  இன்றும் இருந்து வருகிறது.  அவர்களுக்கும் வருடத்திற்கு 12 மாதங்கள்தான்;  ஓவ்வொரு மாதத்திற்கும் ஒரு பிராணியின் பெயர் உண்டு.  இவ்வாறாக ஒவ்வொரு தேசத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கென்று ஒரு முறையை வகுத்துப் பின்பற்றி வருகின்றனர்.  நமது ஜோதிடமானது இந்தப் பூவுலகம் தோன்றிய நாளிலிருந்தே இருந்து வருகிறது. கர்க்க முனிவர் என்பவர்தான் தமது சீடர்களுக்கு ஜோதிடத்தைப் போதித்தார். அதற்குப் பிறகு முக்காலமும் உணர்ந்த நமது  முனிவர்களால் அது போற்றப்பட்டு வந்தது. அவர்கள் பல நூல்கள் எழுதி நமக்களித்தார்கள்.  ஆனால் அந்த நூல்கள் எல்லாம் நமக்கு முழுமையுமாகக் கிடைக்கவில்லை.  காலத்தால் அழிந்தவை போய் மீதமுள்ள நூல்கள்தான் நமக்குக் கிடைத்தன. இவ்வாறாக ஒவ்வொரு நாட்டவரும் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்து தங்களுக்கென்று ஒரு முறையைப் பின்பற்றி வருகின்றனர். ஆகவே ஜோதிடம் என்பது நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இதை நமது நாட்டில் ஒரு சாரார் பின்பற்றி வருகின்றனர்;  உலகில் எந்த நாட்டவரும் பின்பற்ற வில்லை என்று  யாராவது நினைத்தால் அது மிகத் தவறான எண்ணமாகும். அதை மாற்றிக்கொள்வது நல்லது. 

நமது ஜோதிடத்திற்கும் மேலை நாட்டு ஜோதிடத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப்  பார்ப்போம்.


முதலில் நமது ஜோதிடம் போன ஜென்மத்துப் பாவ, புண்ணியங்களை நம்புகிறது. மறு பிறப்பை நம்புகிறது.  This is based on past karma and it believes the theory of incarnation.  மேல் நாட்டு ஜோதிடம் மறு பிறப்பையும் நம்புவதில்லை; போன பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களையும் நம்புவதில்லை.  நாம் பிறந்த நேரத்திலுள்ள கிரகத்தைவைத்தே  நமது வாழ்க்கை அமைகிறது என்று உணர்த்துகிறது.

நமது ஜோதிடத்தில் எல்லவற்றிற்கும் பரிகாரம் என்று ஒன்று உண்டு. தெய்வ நம்பிக்கையின் அடிப்படையிலானது.   அவர்கள் ஜோதிடத்தில் அப்படி எதுவும் கிடையாது. 


நமக்கு ராகு, கேதுவைச் சேர்த்து ஒன்பது கிரகங்கள்.  அவர்களுக்கு ராகு, கேதுக்கள் இல்லாது  பத்துக் கிரகங்கள்.  ஆனால் அதற்குப் பதில்  Uranus, Neptune, Pluto என்று மூன்று கிரகங்கள் அதிகப்படியாக உண்டு.


நமது ஜாதகத்தில் 12 வீடுகள் உண்டு.  இந்த 12 வீடுகளும் "ஸ்ரீ பதிப் பத்ததி" யின் அடிப்படையில் 27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய வீடுகளாகும்.  இது ஸ்திரமானது. ஆகவே இது "நிராயனா" என்றழைக்கப் படும். எல்லா வீடுகளுமே சமமாக 30° இருக்கும்.  அவர்களுக்கு மேஷத்தின் ஆரம்ப இடமான "Vernal Equinox" என்பது  பின் நோக்கிச் செல்லக் கூடியது.  ஒரு வீடு என்பது பிறந்த ஊருக்குத் தகுந்தாற்போல் அளவில் மாறுபடும்.  எல்லா வீடுகளுமே சமமாக 30° இருக்க வேண்டும் என்று இல்லை.  ஊருக்குத் தகுந்தாற்போல் மாறுபடும்.  இது "சயனா" என்றழைக்கப்படும்.


நமது ஜோதிடத்தில் எதிகாலத்தைக் கணிக்க  தசை, புக்தி முறையைப் பின்பற்று கின்றோம்.  அவர்களுக்கு தசை, புக்திகளெல்லாம் கிடையாது.  "Progression" "Direction"  என்ற முறைகளின்படி  எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். 


நாம் நாள் என்பதை ஒரு சூரிய உதயத்திலிருந்து மறு சூரிய உதயமுள்ள காலத்தை ஒரு நாள் என்கிறோம்.  அவர்களுக்கு நாள் என்பது நள்ளிரவு 12.00 மணியிலிருந்து தொடங்கி அடுத்த நாள் இரவு 12.00 மணிவரையில் உள்ள இடைப்பட்ட காலமேயாகும்.

நமக்கு நவாம்சம், ஹோரை, திராசாம்சம் போன்ற உப கட்டங்கள் உண்டு. அஷ்டவர்க்கம் என்ற முறையும் நமது ஜோதிடத்தில்தான் உண்டு.அவர்களுக்கு அதெல்லாம் கிடையாது.   ராசிக்கட்டம் ஒன்றுதான்.
நாம் ஒரு கிரகத்தின் பலத்தைக் கணிக்க ஷட்வர்க்கம் என்ற முறையைப் பின்பற்றுகின்றோம்.  அவர்களுக்கு ஷட்வர்க்கம் எல்லாம் கிடையாது.  கிரகங்களின் பார்வையை ( Aspect) வைத்தே  முடிவு செய்கின்றனர். 

இவ்வாறாகப் பலவிதத்தில் நமது ஜோதிடத்திற்கும், அவர்கள் ஜோதிடத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. 
அவர்களுக்கும் 12 ராசிகள் உண்டு.  அவைகளெல்லாம் ஆங்கிலப் பெயர்கள்.   நாமும் அவற்றை ஆங்கிலத்திலேயே எழுதுவோம்.  அப்போதுதான் எல்லோருக்கும் எளிதாகப் புரியும்.  தவிர எல்லா ராசிகளுக்கும்  Symbol  உண்டு.   அவற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  தவிரவும் இந்த  Symbol களையெல்லாம் நீங்கள் மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்ப் பெயர்
 ஆங்கிலப் பெயர்
Symbol 
மேஷம்
ARIES
ரிஷபம்
TAURUS
மிதுனம்
GEMINI
கடகம்
CANCER
சிம்மம்
LEO
கன்னி
VIRGO
துலாம்
LIBRA
விருச்சிகம்
SCORPIO
தனுசு
SAGITTARIUS
மகரம்
CAPRICON
கும்பம்
AQUARIUS
மீனம்
PISCES


   இந்தியர்களில் சித்தர்களும் ரிஷிகளும் சோதிட நிபுணர்களும் வருங்காலத்தைக் கணித்து வைத்ததைப் போலவே மேல்நாட்டினரும் கணித்திருந்தனர்.

அவர்களில் மிகவும் புராதனமானவர் இம்ஹோட்டெப் (Imhotep).
இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். இப்படிப்பட்ட பேரறிஞர்தான் அவர். பெரும்பெரும் கற்களைக்கொண்டு பிரம்மாண்டமான பிரமிடுகளைக்  கட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். தம்முடைய மருத்துவ ஆற்றலால் பெரும் வியாதிகளை நீக்கியவர். இறப்புக்குப் பின்  மீண்டும் உயிர் பெறக்கூடிய ரகசியத்தை அறிந்தவர். இறந்தபின் உடலை பதனப்படுத்திப் பாதுக்காத்துவைக்கும் விதத்தைக் கண்டுபிடித்தவர். பிரமிடுகளும் அவற்றுள் வைக்கப்பட்ட மம்மி (Mummy) எனப்படும் சடலங்களும் இவருடைய ஆற்றலின் விளைவுகளே.


    மேலைநாட்டு தீர்க்க தரிசிகளில் மிகவும் பிரபலமானவர்  'மிஷெல் தெ நாத்ருதாம்'(Michel de Notre dame).   நாத்ருதாம்'(Michel de Notre dame).   ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதி வைத்தவற்றில் பல  நிகழ்ச்சிகள் நடந்துவிட்டிருக்கின்றன. 

Nostradamus
 உலகின் தலை சிறந்த தீர்க்க தரிசியாக புகழ் பெற்றவர். இவர் தனது ஆரூடங்களை செய்யுள்களாக தனது தி சென்டுரிஸ் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அதில் உலகத்தின் முடிவுவரை கூறி உள்ளார். . இவர் தனது நூலில் ஹிட்லர் ,முசோலினி ,முதலாம் எலிசபெத் , கென்னடி சகோதரர்களின்படுகொலை,  ட்வின் tower அளித்தல் போன்ற பல தீர்க்க தரிசனங்களை முன்கூட்டியே தெரிவித்தவர்.  இரண்டாம் உலகப் போர் , விமானம் கண்டுபிடிக்கப்பட்டது , நீர்மூழ்கி கப்பல் போன்ற பல செய்திகளை அவர் கூறியுள்ளார் . மீனுக்குள் போர்கருவி வைத்து அதிலிருந்து மனிதன் போர் செய்வான் என்று நீர்மூழ்கி கப்பலை அழகாக வர்ணித்துள்ளார்
 ததுந
3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2015 - 2030ம் ஆண்டு வரை நடக்கும் அணு குண்டுகள் மூலம் தாக்குதல் நடக்கும், அல்லது ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்த போரில் ஐரோப்பாவில் பெரும் பகுதி அழிந்து விடும். ரசாயன தாக்குதல் விளைவால் போருக்கு பிறகு மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு வரும் என்று அவர் கூறி இருக்கிறார். 

கண்ணுக்கு தெரியாத விஷயங்களால் (கொரோனா கூட இருக்கலாம்). தலைவர்களின் சூழ்ச்சிகளால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழப்பர். இவை அனைத்திற்கும் ஒரு முடிவு பிறக்கும் அப்போது 3 பக்கம் நீர் சூழ்ந்திருக்கும் இடத்திலிருந்து ஒரு தலைவன் உதிப்பான், அவனை உலக மக்கள் ஒருவர் பின் ஒருவராக தலை வணங்கி ஏற்பார்கள். உலகம் நன்மை பெறும். புயலுக்குப் பின் அமைதி ஏற்படும்.

அதே போல உலக தலைவர்கள் சிலரை கொள்ள முயற்சி நடக்கும் இதில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர்
, ரஷிய பிரதமர், ஜெர்மனி அதிபர், இஸ்ரேல் அதிபர், பிரான்சு அதிபர் ஆகியோரில் இந்த நபர் இருக்கலாம் என்று கருதப்படுகிது.

2024 - 2030ம் ஆண்டு சீனா / இந்தியா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார்.

2033-ல் இருந்து 2054 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.

2050-ல் இருந்து 2090க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார்.
  
கி.பி. 3700 - 3800ல் உலகம் அழியும் என்று எழுதிவைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். ரகசியம் உடையும் நேரமும் அதுதான்

அவருக்கு எங்கிருந்து இப்படி ஒரு ஞானம் வந்தது என்பதும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது . எது எப்படி இருந்தாலும் ஆறுட உலகில் நாஸ்ட்ரடாமஸ் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் உறுதி