ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Tuesday, October 29, 2019

பாலாரிஷ்டம் − சுஜித் / குழந்தைகளின் மரணம்


கொடுமை.. கையை அசைத்து, பேசிக்கொண்டிருந்த குழந்தை.. கண் முன்னே நழுவி இப்போ எதுவுமே தெரியல

ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை 25.10.2019 மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.

கண்முன்னாலேயே தன்னுடைய குழந்தை படிப்படியாக பூமியின் ஆழத்திற்குச் சென்று கொண்டே இருப்பதை பார்க்க கூடிய மிகப்பெரும் பரிதாபம்  ஆரோக்கியதாஸ் மற்றும் மேரி தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது.

2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் 25.10.2019 மாலை விழுந்தபோது, 26 அடி ஆழத்தில் தான் இருந்தார். அவரை எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பிக்கை அதிகமாக காணப்பட்டது. ஏனெனில் ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட கேமரா, குழந்தையின் உருவத்தை படம்பிடித்தது. ஆக்சிஜன் அனுப்புவதும், எளிதாக இருந்தது. அவ்வளவு ஏன்? குழந்தை அழுவது கூட வெளியே கேட்டது. குழந்தையின் தாய் பேசியதற்கு குழந்தை 'உம்' என்று பதிலும் சொன்னது.

 குழந்தை விழுந்த முதல் நாள் மாலை 6.30 மணியளவில் குழந்தையின் கையசைவு தெரியும் போது எடுக்கப்பட்ட video.



சுறுசுறுப்பு, துடுக்கு மற்றும் துறுதுறுப்பு கொண்ட குழந்தையாம் சுஜித். அவர் உறவினர்கள் சொல்கிறார்கள். எனவே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி கொண்டிருந்தாலும் கூட தைரியமாகவே காணப்பட்டது அந்த குழந்தை. ஆரம்பத்தில் எல்லாம் தைரியத்தோடு தான் குழந்தை பதில் சொன்னது. ஆனால் நீண்ட நேரமாக ஈரமான மணலுக்குள் இருந்ததாலும், தண்ணீர் மற்றும் உணவு உண்ணாததாலும் போகப்போக குழந்தையின் குரலில் நடுக்கம் தென்பட்டது. இது தவிர குழந்தை ஓரளவுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது என்று நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் 26.10.2019 அதிகாலை மீட்பு பணிகளில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக அந்த குழந்தை 70 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இவ்வாறு சுஜித் சென்றபோது அவரது தலைக்கு மேல் ஆள்துளை கிணற்றில் இருந்த மணல் விழுந்துவிட்டது. அதுவரை சிறுவன் கையை அசைத்து அதை கேமராவில் பார்த்து வந்த அதிகாரிகளால் அதற்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.

சுஜித் அழுகுரலும் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் அருகாமையில் நடக்கக்கூடிய பள்ளம் தோண்டும் பணிகள் காரணமாக சுஜித் மேலும் கீழே சென்று கொண்டே இருக்கிறார். இரவு 7 மணி அளவில் கிடைத்த தகவல்படி 100 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டார். ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்ற தகவலும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

மணல் மேலே மூடியிருப்பதால் குழந்தையை கேமராவாலும் படம்பிடிக்க முடியவில்லை, கையை அசைத்து தாய் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த குழந்தை படிப்படியாக இப்படி அத்தனை பேர் கண் முன்னாலும் அடி ஆழத்துக்குச் சென்றது எவ்வளவு பெரிய கொடுமை


தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சிறுவன் சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏராளமானோர் சாதி, மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வந்தனர்.

கடுமையான பாறைகள், இயந்திரத்தில் பழுது, குறுக்கிடும் மழை என அவ்வப்போது மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக 80 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், 29.10.2019 அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிறுவன் சுஜித்தின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்தனர்

சந்திரனுக்கு ராக்கெட் விடத்தெரிந்த நமக்கு, 100 அடி ஆழத்திற்குள் இருந்த குழந்தையை உயிருடன் மீட்கும் அறிவியல் தொழில்நுட்பம் இல்லாதது மிகுந்த வேதனையான மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

இனி வருங்காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொது மக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.


பாலாரிஷ்டம்

இனி ஜோதிட ரீதியாக குழந்தைகளின் இறப்பிற்கு காரணங்களைப் பார்ப்போம்

பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல் ரீதியாகத் துன்பம்
அடைவது என்று பொருள்.

தேய்பிறை அல்லது சுபத்தன்மையற்ற  சந்திரன் பாபக் கிரகங்களுடன் இணைந்தோ , கிரகண அமைப்பிலோ 6,8,12ம் இடத்திலோ, மாரக ஸ்தானத்திலோ அல்லது அதன் அதிபதிகளுடனோ இணைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும்.

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் அல்லது மாரக ஸ்தானத்தில் இன்னும் சில சேர்கைகளினால் பாலாரிஷ்ட தோஷம் ஏற்படும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் பிறந்த காலத்திலிருந்து 1 முதல் 12 ஆண்டுகள் வரை வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

பிறந்த உடனே அல்லது பிறந்த சில ஆண்டுகளில்(12 வருடங்களில்) இறப்பதும் பாலாரிஷ்ட தோஷம் எனப்படும்.

30 வயதுவரை அற்பாயுள் என்றும், 60 வயது வரை மத்திம ஆயுள் என்றும், 90 வயதுவரை  மற்றும் அதற்கு மேலும்  இதை தீர்க்காயுள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக சர லக்னத்திற்கு இரண்டாம் இடமும் ஏழாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதிகள் மாரக ஸ்தானாதிபதிகளாக வருவர்.

ஸ்திர லக்னத்திற்கு மூன்றாம் இடமும் எட்டாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதிகள் மாரக ஸ்தானாதிபதிகளை வருவர்.

உபய லக்னத்திற்கு ஏழாம் இடமும் பதினொன்றாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதி மாரகாதிபதியாவார்கள்.

மாரக ஸ்தானத்தில் இருக்கும் ராகு கேதுக்கள் அந்த வீட்டு அதிபதியின் பலனை எடுத்து செய்வதால் அவர்கள் சுப நிலையில் இல்லாத போது மரணம் அல்லது அதற்கு ஈடான கண்டஙகளை தருவார்கள்.

ஒரு ஜாதகத்தில் ஆயுளின் வலுவைத் தீர்மானிப்பதற்கு லக்னாதிபதி , எட்டாம் அதிபதி, சனி, பாதகாதிபதி, மாரக ஸ்தானாதிபதி நிச்சயமாக ஆராயப்பட வேண்டும்.

மேலும் மாரக திசைகள் ஒருவருக்கு நடக்கும் போது ஏழரை சனி, அட்டமச் சனி குறிக்கிட்டால் கண்டிப்பாக மாரகம் மற்றும் அதற்கு சமமான கண்டம் உண்டு.

அது போல் ஒரு ஜாதகத்தில் சனி அம்சத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைவது நல்லதல்ல.

கிரகண அமைப்பில் இருக்கும் போது லக்னாதிபதி ராகுவுடன் நெருக்கமாக இருப்பதும் நல்லதல்ல.

ஆயுள் ஸ்தானாதிபதி,சனி, லக்னாதிபதி போன்றவை நீ்சம் ஆவதும் நல்ல நிலை அல்ல.

செவ்வாய் தசையில் ராகு அல்லது கேது புக்தி, சனி தசையில் ராகு அல்லது கேது புக்தி, ராகு, கேது தசையில் புதன் புக்தி போன்ற காலங்களில் பாலாரிஷ்ட பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் கடுமையான சோதனைகளை சந்திக்க நேரிடும்.

புத்திரகாரகனான குரு, பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் பலவீனமாக அமைந்தாலும், புத்திர ஸ்தானாதிபதி ராகு கேதுக்களோடு சுபத்தன்மை  அற்று பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் இணையும் போதும், 5ம் இடத்தில்  பாவிகள் பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் அமையும்போதும் அவர்களது குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் மேலும் தீவிரமாக தாக்கக்கூடும் என்கின்றன ஜோதிட விதிகள்.