ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Thursday, May 6, 2021

கொரானாவில் இருந்து பாதுகாக்க

 கொரானா வைரஸ் என்பது உலகத்தின் மிக நுண்ணிய நச்சுக் கிருமி. இது பாக்டீரியாவை விட 100 மடங்கு சிறியது.

உலகில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. சில வகை வைரஸ்களை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். சளியை ஏற்படுத்துவதும் வைரஸ்தான். நாய்க்கடியில் உருவாகும் ரேபிஸ், போலியோ, எச்.ஐ.வி போன்ற நோய்களை ஏற்படுத்துவதும் வைரஸ்கள்தான்.

கரோனா வைரஸ், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. வவ்வால்கள் மற்றும் எறும்புத் தின்னிகள் போன்றவற்றில் இருந்து இவை பரவியிருக்கலாம். ஓரிடத்தில் நிலை கொண்டிருக்கும் வைரஸ் சில நாட்களுக்கு அப்படியே இருக்கும். ஒரு செல்லுக்கு நுழையும்போது உயிர் பெற்று இயங்கத் தொடங்கும், வளர ஆரம்பிக்கும். 

இரண்டாவது அலையில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, நோய் அறிகுறி இல்லாமல் இருப்பவர்களிடமிருந்து (A Symtematic) பெருமளவில் இது பரவ ஆரம்பித்திருக்கிறது. தவிர, இந்த முறை இந்த வைரஸ் மூச்சுப் பாதையின் துவக்கத்தில் அதாவது மூக்கில் தேங்குவது அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த கொடிய நோயை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. அதற்கான விழிப்புணர்வு பதிவே இது.

கோவை மருத்துவரின் பார்வையில் கொரானா பாதிப்பு

video பார்க்க மேலே இருமுறை இடைவெளியுடன் click செய்யவும்.

கோவிட்-19 ன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வறட்டு இருமல் தான்.

சில நோயாளிகளுக்கு உடல் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், தொண்டைப் கரகரப்பு, கண் எரிச்சல்,  சுவை & வாசனை இழப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு கூட இருக்கலாம். இந்த நோயின் அறிகுறிகள் ஆரம்பத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். பிறகு படிப்படியாக அதிகரிக்கும். சிலருக்கு வைரஸ் தாக்கம் இருந்தாலும் எந்த அறிகுறிகளும் இருக்காது.அதனால் அவர்கள் உடல் ரீதியாக நன்றாகவே உணருவார்கள். பெரும்பாலான மக்கள் (சுமார் 80 சதவீத மக்கள்) எந்த சிறப்புச் சிகிச்சையும் இல்லாமலேயே நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.
நோயை ஏற்படுத்தும் வைரஸ் காற்று வழியாகப் பரவுவதை விட, சுவாச துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சமீீபத்திய முடிவுகள் இந்த தொற்று காற்றில் 6 அடி பரவும் என்பதை நிரூபணம் செய்கிறது.
இதைப்பற்றி ஒரு வீடியோ;



நாம் செய்ய வேண்டிய பொதுவானவை: 
1) கிருமிநாசினிகள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கை மற்றும் கால்களை, வெளியில் சென்று வீடு திரும்பும்போது முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் அருகில் இருக்கும் வைரஸ்கள் அழியும்.

2) முகக் கவசம் (N95 mask) கட்டாயம் அணிவது. சாதாரண cloth mask virusகளை தடுக்காது. இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நபர்களைப் பராமரிப்பவர்களுக்கும் முகக்கவசங்கள் (N95 mask) கட்டாயம் என்கிறது உலக சுகாதார மையம். முகக் கவசம் கண்டிப்பாக மூக்கை மூடிய படி இருக்க வேண்டும்

3) சளி, இருமல், தும்மல் உள்ளவரிடம் இருந்து 2 மீட்டர் (6 அடி) தள்ளி இருக்கவும்.
நாமும் சரி நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சரி,  தும்மல் இருமல் வரும்போது அடுத்தவர் மீது படும்படி நடக்கக்கூடாது.

4) தேவையில்லாமல் கண், மூக்கு வாய் போன்றவற்றில் கைகளை வைக்க வேண்டாம். வைரஸ் இவைகளில் சம்பந்தப்படும்போதுதான் நம் உடலுக்குள் செல்கிறது. காலையில் தினமும் மூக்கில் தேங்காய் எண்ணெய் 2 சொட்டுக்கள் விடலாம். இது வைரஸ் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும்.

5) உங்கள் பகுதியில் தடுப்பூசி கிடைத்தால் அதை போட்டுக் கொள்வது பற்றி பரிசீலிக்கலாம், ஆனால் இது கொரானா பாதிப்பை முற்றிலும்  தடுக்காது, மாறாக மோசமான பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்கும். ரத்தக் கொதிப்பு(Blood Pressure), ஹை சுகர்(High Sugar), இதயக் கோளாறுகள் உள்ளவர்கள் தடுப்பூசி போடும் முன் உங்கள் மருத்துவரை  கண்டிப்பாக கலந்து ஆலோசிக்கவும். 

6) உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருப்பது நல்லது.  உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

7) கொரோனா பாதித்தவர்கள்  முடிந்தவரை குப்புறப்படுத்து உறங்குவது, (இது உங்கள் நுரையீரலை விரிவடையச் செய்து மூச்சு விட எளிதாக்குகிறது), எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகள் பற்றிய சென்னை மாநகராட்சியின் அறிவுரை (video)




8) கொரோனா பாதிப்புள்ள அல்லது அதிக கூட்ட நெருக்கம் இருக்கும் இடங்களுக்குச் செல்லவே கூடாது. அப்படியே செல்ல நேரிட்டாலும் தொடுவதோ கைகுலுக்குவதோ கூடாது. நமது பாரம்பரிய முறைப்படி கைகளை கூப்பி வணக்கம் சொல்லலாம். 
அத்தியாவசியத் தேவையன்றி வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.

9) இறைச்சி, தயிர், தரமற்ற உணவுகள்,  மது, புகையிலை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து மீளும் வரை தலைக்கு எண்ணெய் தேய்ப்பது மற்றும் தலைக்கு குளிப்பது உள்ளிட்டவை  செய்யக் கூடாது ஏனெனில் இது உடலை குளிர்வித்து சளியை அதிகப்படுத்தும்.

பாரம்பரிய மருத்துவத்தில் கொரானா உட்பட அனைத்து வகை காய்ச்சலும்  வராமல் தடுக்க பரிந்துரைக்கப் பட்டவை;

10) கசாயம்
சித்த மருத்துவர் பரிந்துரைத்தது
நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஆடாதொடை 5 இலைகள், சிற்றரத்தைச் சிறிதளவு, அதிமதுரம் சிறிதளவு, மிளகு 5, திப்பிலி 2 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 மிலியும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 60 மிலியும் கொடுக்கலாம். மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம். மாலையில், தூதுவாளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவாளை சூப் செய்து பருகலாம்.

வாரம் ஒரு முறை நிலவேம்பு கசாயம் குடிக்கலாம், வாழை தண்டு/பூ சாப்பிடலாம். சித்த மருத்துவக் கடைகளில் கபசூர குடிநீர் விற்கப்படும். அதையும் பருகினால், உங்கள் அருகே கொரோனா வைரஸ் வர பயப்படும். 

11) உணவு முறை
சமூக வலைதளங்களில் இடம்பெற்ற உணவுமுறை மருத்துவ video:


அறிகுறி தெரிந்த நாள் முதல் பூரண குணமாகும் வரை சூடாண நீர் மட்டுமே அருந்தவும்.

பச்சை காய்கறிகள், முந்திரி, பாதாம், நிலகடலை, கொண்டகடலை, காளான், பயிறு வகைகள், சிறுதானியங்கள் (கம்பு, ராகி, சோளம், தினை.... உள்ளிட்டவை),
பூண்டு மஞ்சள் சேர்த்த பால், 
இஞ்சிசாறு தேன் கலந்த சுடுநீர், 
கிராம்பு சேர்த்த தேங்காய் பால், எலுமிச்சை கலந்த மோர், துளசி, வெற்றிலை, கடுக்காய், நெல்லிக்காய், கொய்யா, மாதுளை, அத்திப்பழம், அண்ணாச்சி அல்லது ஆரஞ்சு,  வாழைபழம், வல்லாரை அல்லது முருங்கை கீரை, பாகற்காய், வெந்தயம், மிளகு ரசம், முட்டை (சின்ன வெங்காயம், pepper பிடித்தவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்), போன்ற உணவுகளில் உங்களால் முடிந்தவற்றை தினமும் சேர்த்துக் கொள்ள  வேண்டும். நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். 

 12) பிராண சக்தி அதிகரித்தல்
காலை வேளையில் குறைந்தது 15 நிமிட அளவு சூரிய ஒளி படும்படி நடக்க வேண்டும். 8 வடிவ  நடைப்பயிற்சி  செய்யலாம். பிராணயாமம், சூரிய நமஸ்காரம் தினமும்  செய்தால் உடல்நலம், ஆத்மபலம் உண்டாகும்.

பொதுவாக நீங்கள் உள்ளிழுக்கும் மூச்சை 15 வினாடிகளுக்கு உங்களால் மூச்சைவெளியிடாமல் அடக்க முடியும் என்றால் உங்களது நுரையீரல் திறன்  நார்மலாக உள்ளது என்று அர்த்தம். நுரையீரல் திறன் மேம்பட தினமும் பலூன் ஊதும் பயிற்சி மேற்கொள்ளலாம்.

13) மூச்சுக்குழாய் சுத்தப்படுத்துதல் (தினமும் ஒன்று முதல் மூன்று முறை) ;
i) மூக்கு மற்றும் வாய் வழியாக சிறிது மஞ்சள் உடன் நொச்சி, வேப்பிலை, தைலமர (eucalyptus) , கற்பூரவல்லி, துளசி  போன்ற  உங்கள் பகுதியில் கிடைக்கும் தளைகளைபோட்டு ஆவி பிடிக்கும் பழக்கத்தை தினமும் கடைபிடித்தல் நல்லது. குறைந்தபட்சம் மூக்கு (வலது பிறகு இடது) & வாய் வழியாக தலா 12 முறை அல்லது 3 நிமிடம் சூடான ஆவியை  உள்ளிழுத்து விடவும். 

மற்றும்

ii) கிராம்பு, உப்பு, மஞ்சள் சேர்த்த வெதுவெதுப்பான கரைசல் நீரில் தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
இதனால் ஏதேனும் கிருமிகள் வாய் அல்லது தொண்டை பகுதியில் இருந்தால் அது கொள்ளப்படும்.

தினமும் ஆழமான மூச்சு விடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக நீளமாக மூச்சு ஒவ்வொரு முறையும் உள்ளிழுத்து விட வேண்டும்.

14)  Oxygen அளவு சீராக இருக்க


நமது உடலில் ரத்த ஆக்ஸிஜன் 95க்கு கீழ் குறையாமல் இருக்க வேண்டும்.Oxygen குறைபாடு ஏற்படும் பட்சத்தில் குப்புற படுத்து மூச்சு விட வேண்டும். 

தீவிர மூச்சுத்திணறல் அல்லது சுவாசித்தல் ஒரு நிமிடத்திற்கு 30 தடவைக்கு மேல் இருந்தாலோ அல்லது ஆக்சிஜன் அளவு 90%க்குக் கீழ் சென்றாலோ, அது ‘தீவிர கொரோனா’வாகும். இத்தகைய நிலையை எட்டும் 3% சதவிகிதம் மக்களுக்கு நிச்சயம் ஆக்சிஜன் மட்டுமே உயிரைக் காக்கும் மருந்தாகும். கிராம்பு, மஞ்சள், பட்டை முதலியவை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.

 கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால் நுரையீரல் பை விரிவடைவதுடன், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாக அதிகரிப்பதை ஐஐடி நிபுணர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

எப்படி செய்வது


உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். முதலில் ஆள்காட்டி விரலை மூக்கின் அடியில் வைத்து மூச்சை கவனிக்க வேண்டும். எந்த நாசி துவாரத்தில் குறைவான அளவு மூச்சு வருகிறது அல்லது அடைத்திருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள கையின் கட்டை விரலை செங்குத்தாக உயர்த்திப் பிடிக்க வேண்டும். மற்றொரு கையின் ஆள்காட்டி மற்றும் கட்டை விரலால், உயர்த்திப் பிடித்த கட்டை விரலின் அடியில் சுற்றி வளைத்து, இரு கைகளின் மற்ற அனைத்து விரல்களையும் கோர்த்துக் கொள்ள வேண்டும்.



15) உடற்பயிற்சி
யோகாசன முறையில் நாடிசுத்தி,  பிராணயாமம் தினம் செய்து வந்தால் உங்களுக்கு மூச்சு பிரச்சனை ஏற்படாது.
உங்களால் முடிந்த பயிற்சிகளை காலையில் தினம் குறைந்தது அரை மணி நேரம் செய்யலாம். கொரானா பாதிப்பு உள்ளவர்கள் Pulse Oximeter உபயோகப்படுத்துதல் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கும் video. (சமூக வலைதளங்களில் இடம்பெற்றது)



16) மன தைரியம் 
மன மகிழ்ச்சி தரும் விஷயங்களை பார்ப்பது, கேட்பது, சிந்திப்பது, பேசுவது. இவை உங்களிடம் நேர்மறை ஆற்றலை உண்டாக்கி, உங்களை வியாதிகளில் இருந்து விடுவிக்கும். மன தைரியம் மிக முக்கியம். தெய்வம் உங்களை காக்கும் என்று நம்புங்கள். பயம், கவலை முதலியன எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி நோயை அதிகப்படுத்தும். 
கொரானாவினால் ஏற்படும் மரணங்களில் 20% - 30% வரை மன பயத்தினாலேயே ஏற்படுகிறது. Negative செய்திகளை கேட்காதீர்கள்.

17) மற்றவை
சூடாண உணவு மற்றும் நீர், தினமும் குறைந்தபட்சம் 1.5 லிட்டர் நீர் குடிப்பது,  காற்றோட்டமான அறை - கதவு ஜன்னல்களை முடிந்த மட்டும் திறந்து வைப்பது, நல்ல ஓய்வு, வீட்டில் சாம்பிராணி தூபம் இடுவது நல்லது.

18) கொரோனா வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எப்போது மருத்துவமனையில் சேர வேண்டும் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, இதைப்பற்றி ஒரு வீடியோ


மேலே சொன்ன வழிமுறைகள் பல்வேறு மருத்துவர்களின்  கருத்துக்கள், சமூக வலைதளங்களில் இடம்பெற்றது.  

கொரானா ஏற்படுத்திய பாதிப்புகள்
கொரானா இரண்டாம் அலை  - கோரதாண்டவம் 
சில மாநிலங்கள் திடீரென உயர்ந்த தொற்று எண்ணிக்கையை சமாளிக்கத் தயார் நிலையில் இல்லை; மருத்துவ ஆக்சிஜன் விரைவில் தீர்ந்து போனது; மருத்துவமனையில் படுக்கைகள் விரைவில் தீர்ந்தது; காத்திருந்து காத்திருந்து ஆம்புலன்சிலேயே சிலர் இறந்தனர், உடல்களை எரியூட்ட இடங்கள் போதவில்லை, சில கிராமங்களில் கங்ஙையில் உடல்கள் மிதக்க விடபட்டன. தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் தட்டுப்பாடு. மாநில அரசுகள் இடங்களை தயார் செய்யும்போது போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லை, மருத்துவ மாணவர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சில இடங்களில் மருத்துவர்களே இந்நோய்க்கு பலியானார்கள். மே 2021 முதல் வாரத்தில்,  தோராயமாக தினமும் 4 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டது, 4000 பேருக்கு மேல் தினமும்  இந்தியாவில் இறந்தனர். அரசு கணக்குகளில் வராத இறப்புகள் இன்னும் அதிகம். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1 வாரத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் வசூலித்தார்கள், ஆக்சிஜன், மருந்து,  மாத்திரைகள், ஆம்புலன்ஸ் சேவைகள்  நான்கு மடங்கு வரை விலை ஏற்றப்பட்டன. சுவாசிக்கும் காற்றிற்கு(Oxygen) கூட கட்டணம் செலுத்த வேண்டியது ஆயிற்று. உலக அளவில்  கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். 

பொதுவாக ஆரம்பகட்ட அலோபதி மருத்துவ முறையுடன் சித்தா, யோகா, இயற்கை மருத்துவம் போன்ற முறைகளையும் தொற்று அறிகுறி ஆரம்பித்த  நாள் முதல் சேர்த்து கடைபிடிக்கும் போது நோயாளிகள் 100% குணமடைகிறார்கள். உயிர் இழப்புகள் பெருமளவில் தடுக்கப்படுகிறது. கொரானாவை வெற்றிகரமாக  குறைத்த  பல நாடுகளில் இந்த வழிமுறைகளை அங்குள்ள மக்கள்  கடைபிடிக்கிறார்கள், விரைவில் குணமடைகிறார்கள்.

இதனை கடைபிடித்து அனைவரும் கொரானாவை வெல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்தனை செய்வோம்.

கொரானா நமது ஆயுளை பாதிக்குமா என்பது பற்றிய ஜோதிட விளக்கங்களை முந்தைய பதிவில் காணவும்.