ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Tuesday, April 15, 2014

வாசகர் கேள்வி பதில் - அயனாம்சம்


வாக்கி படி - ஒரு ஆண்டு என்றால் 360 நாள் .என்றால் திருகணித்தப்படி
ஒரு ஆண்டு எத்தனை நாள் ? அயனாம்சம் பற்றி விளக்குக, அயனாம்சம் எப்படி ஒவ்வொரு முறையுலும் மாறுகிறது?

வருஷத்தின் காலம் 365 நாள், 15 நாழிகை, 25 விநாடிகள் ஆகும். வாக்கியத்தில், சூரியதசை 6 ஆண்டுகள், சந்திர தசை 10 ஆண்டுகள், செவ்வாய் தசை 7 ஆண்டுகள், ராகு தசை 18 ஆண்டுகள் என்று ஆண்டுக்கணக்கில் கூட்டப்பட்டுத்தான் ஜாதகனின் நடப்பு தசை கணக்கிடப் படுகிறது. ஆகவே அந்த ஆண்டிற்கு 5.25 நாட்கள் என்னும் வித்தியாசம் காணாமல் போய்விடும்!

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன.
1.
திருக்கணித பஞ்சாங்கம்
2.
வாக்கிய பஞ்சாங்கம்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். தமிழகக் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள் ஒன்று கூடி எழுதிய சுலோகங்களில் உள்ள கணித முறைப்படி அப்படியே எழுதப்படும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமாகும்.

இந்த வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

,
இந்திய ஜோதிடத்தில்  நட்சத்திரம், மற்றும் கிரகங்களது கோண அளவுகள் யாவும் அயனாம்சஅளவீட்டினுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பஞ்சாங்கங்களில் இடம்பெறுகின்றன. இந்த அயனாம்சக் கணிப்பில் வாக்கிய பஞ்சாங்கமும்,திருக்கணிதமும் வேறுபட்டிருக்கின்றன. இதே போன்று கே.பி;  இராமன்; லஹிரி எனப் பல வகையான அயனாம்சக் கணிப்புகள்இப்போது புழக்கத்தில் உள்ளன. இதன் காரணமாகப் பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் ஒருவரது பிறந்த நட்சத்திரத்தினைக் கூட முன்பின்னாகக் குறிப்பிடும் நிலை உள்ளதால், சாதாரண வாசகன் இதனால் குழப்பமடைவது இயல்பானதே. அதுவும், ஒரு நட்சத்திரத்தின் ஆரம்பத்திலோ அல்லது அந்த நட்சத்திரம் முடிவுறும் சமயத்திலோ பிறக்கும் ஒருவர் இதுபோன்ற குழப்பங்களில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது! இவற்றில் வாக்கிய பஞ்சாங்கம், சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையிலும், திருக்கணிதம் நவீன அறிவியலின் துணையோடும் கணிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அறிவியல்:
ஜோதிடம் என்பது கடினமான கணக்கீடுகளையும் வானவியல் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது. ஜோதிட அடிப்படையை புரிந்துகொள்ள வானவியல் அடிப்படைகளை ஓரளவு புரிந்துகொள்வது அவசியம். பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றிவருவதை நாம் அறிவோம். இதை பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியை சுற்றி வருவது போல் தோன்றும். இந்த சூரியனின் வட்ட பதையே ecliptic எனப்படுகிறது. பூமியை சுற்றி கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளுக்கு அட்ச ரேகை (lattitude) என்று பெயர். இதில் பூமியை வடக்கு தெற்காக இரண்டாக பிரிக்கும் கோடு பூமத்திய (equator) ரேகையாகும். இது 0 பாகை lattitude ல் அமைந்துள்ளது. இதற்கு வடக்கில் அமைந்துள்ள இடங்கள் north lattitude எனப்படும். இது 90 பாகை வரை (வட துருவம் வரை) உள்ளது. தெற்கில் அமைந்துள்ள இடங்கள் south lattitude எனப்படும். இது 90 பாகை வரை தெற்கே உள்ளது. பூமியை சுற்றி வடக்கு தெற்காக மேலும் கீழுமாக செல்லும் கற்பனை கோடுகள் தீர்க்க ரேகை (longitude) எனப்படும். இதில் லண்டனில் உள்ள கிரீன்விச் அருகில் செல்லும் கோடு prime meridian எனப்படும். இது 0 பாகை அளவுள்ளது. இதிலிருந்த கிழக்கே உள்ள பகுதிகள் east longitude எனப்படும்.மேற்கே உள்ள பகுதிகள் west longitude எனப்படும். இந்த அட்ச ரேகை தீர்க்க ரேகை அமைப்பு பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண உதவுகிறது. வான மண்டலத்தில் equator ன் நீட்சி (extension) celestial equator எனப்படும். பூமியிலிருந்து நட்சத்திர மண்டலம் வரை இதை கற்பனை செய்து கொள்ள வேண்டும். அது போல் celestial longitude உள்ளது.
zodiac எனப்படும் ராசி மண்டலம் மேஷம் (Aries) முதல் மீனம் (Pisces) வரை 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பூமி தன் அச்சில் சுமார் 23.5 பாகை சாய்வாக சுற்றி வருகிறது. எனவே ecliptic எனப்படும் சூரியனின் சுற்று பாதை celestial equator க்கு 23.5 பாகையில் சாய்ந்துள்ளது. இந்த ecliptic, celestial equator ஐ சந்திக்கும் இடமே equinox எனப்படும். இது இரண்டு இடங்களில் ஏற்படுகிறது. சூரியன் equoator தெற்கிலிருந்து வடக்காக கடக்கும்போது ஒருமுறை. இது vernal equinox எனப்படும். இது மார்ச் 21 ல் ஏற்படும். இந்த நாளில் சூரியன் நிலநடுகோட்டிற்கு நேர் மேலே வருகிறது. இந்த நாளில் இரவு பகல் சமமாக இருக்கும். வடக்கிலிருந்து தெற்காக கடக்கும்போது autumnal equinox எனப்படும். இது செப்டம்பர் 22 ல் ஏற்படும். இந்த vernal equinox ஏற்படும் இடமே ராசி மண்டலத்தில் 0 பாகையாகும். இதுவே மேஷ ராசியின் தொடக்கம் ஆகும். பூமி தன் அச்சில் சுழல்வதை அறிவோம். அனால் இந்த அச்சும் குறிப்பிட்ட வேகத்தில் சுழல்கிறது. இந்த அச்சு 72 வருடத்தில் 1 பாகை அளவு நகர்கிறது. அதாவது வருடத்திற்கு 50. 3 விகலை அளவு முன்னோக்கி நகர்கிறது (1/60 பாகை ஒரு கலை, 1/60 கலை ஒரு விகலை ஆகும்). எனவே சுமார் 25800 வருடங்களில் 360 பாகை சுழன்று மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறது. இந்த மேற்கு நோக்கிய நகர்வு காரணமாக vernal equinox நிகழ்வு முன்கூட்டியே நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் 0 பாகை மேஷம் வானில் நிலையாக உள்ள நட்சத்திர அடிப்படையில் கணிக்கபடுகிறது. சூரியன் முழு சுழற்சியை முடித்து மிண்டும் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் அருகில் வருவதே sideral year எனப்படும் நட்சத்திர அடிப்படையிலான வருடமாகும். ஒரு vernal euinox க்கும் அடுத்த vernal equinox க்கும் இடைபட்ட காலம் tropical year எனப்படும். இந்த tropical year, sidereal year ஐ விட 20 நிமிடங்கள் குறைவு. வருடத்திற்கு 20 நிமிடம் என்பது 25800 வருடங்களில் 1 வருடத்தை எட்டும். எனவே இந்த vernal equinox 25800 வருடங்களில் ஒரு முழு சுற்று சுற்றி மீண்டும் 0 பாகை மேஷம் க்கு வந்துவிடுகிறது. இந்த முன்னோக்கிய நகர்வே precession of equinox எனப்படும்.



அயனாம்சம்
இந்த 50.3 விகலை முன்னோக்கிய நகர்வினால் ஒரிஜினல் மேஷம் வர மேலும் வருடத்திற்கு 50.3 பாகை சூரியன் நகர வேண்டும். கி.பி 293 ல் sideral zodiac மற்றும் tropical zodiac ஒரே இடத்தில் இருந்தன. எனவே கி.பி 293 ல் அயனாம்சம் 0 பாகை. தற்போது கி.பி 2013 ல் அயனாம்சம்: (2013-293)=1720*50.3=86516 விகலை. 86516/60=1441.9333 கலை 1441.9333/60=24.03222 பாகை. இந்திய ஜோதிடத்திற்கும் மேற்கத்திய ஜோதிடத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று இந்த அயனாம்சம். மேற்கத்திய ஜோதிடத்தில் அயனாம்சம் இல்லை. அது நகரும் zodiac ஐ பின்பற்றுகிறது. அதாவது எப்போது vernal equinox ஏற்படுகிறதோ அதுதான் 0 பாகை மேஷம். அனால் இந்திய ஜோதிடம் அயனாம்சத்தை கணக்கில் எடுத்துகொண்டு அந்த வித்தியாசத்தை கழிக்கிறது. இந்திய ஜோதிடத்தில் கிரக நிலைகள் Nirayana longitude (அயனம் இல்லாத) எனப்படுகிறது. மேற்கத்திய முறையில் Sayana longitude எனப்படுகிறது.
இந்த அயனாம்ச அளவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வெவ்வேறு நிபுணர்கள் கணித்த அயனாம்சத்தில் சிறிது வேறுபாடு உள்ளது. இதில் பெரும்பாலானோர் ஏற்று கொள்வது லகிரி அயனாம்சம் எனப்படும் திருக்கணித முறையாகும். இது அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.


கர்மாவை கழிக்காமல் தற்கொலை செய்தல் மீண்டும் அடுத்த பிறப்பில் அந்த கர்மாவை கழித்தே தீர வேண்டுமா?
 ஒருவருடைய கர்மா தீராமல், தற்கொலை செய்தால் மீண்டும் அடுத்த பிறவிச் சுழல்அமையும்.
இந்து சமயத்தில் கர்மா என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றால்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன் படுத்தப்படுகிறது.

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது.
மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.

ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.